News October 31, 2025
கள்ளக்குறிச்சி: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 31, 2025
கள்ளக்குறிச்சி: நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்போர் கவனத்திற்கு!

கள்ளக்குறிச்சி: வெள்ளிமலை வனச்சரகத்திற்குட்பட்ட ஆரம்பூண்டி, சேத்தூர் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் அரசு அனுமதின்றி பதுக்கி வைத்திருக்கும் நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாம் என வானவர் வினோத்குமார் தெரிவித்துள்ளார். மேலும், ஒப்படைக்கும் நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் அவர்கள் பெயர், முகவரி ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
News October 31, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி விவரங்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (அக்.31) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News October 31, 2025
கள்ளக்குறிச்சி: இழந்த செல்வதை மீட்டு தரும் பெருமாள்!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் தாலுக்காவிலுள்ள திருவரங்கத்தில் அமைந்துள்ளது ஆதி திருவரங்கம் கோயில். இந்த கோயில் 11ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. இந்த கோயிலில் ரங்கநாத சாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும், இங்கு சனிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தால் திருமணம் வரம், குழந்தை வரம் மற்றும் இழந்த செல்வங்கள் மீண்டும் கிடைக்கும் என்பது ஐதீகம்.ஷேர் பண்ணுங்க


