News December 11, 2025

கள்ளக்குறிச்சி: சிறுமி 2 மாதம் கர்ப்பம்.. 4 பேர் மீது வழக்கு!

image

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 29 வயது வாலிபருடன் குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின்னர் தற்போது சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும், இது தொடர்பான புகாரில் குழந்தை திருமணம் செய்த சிறுமியின் கணவர் உட்பட நான்கு பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று (டிச.10) வழக்கு பதிவு செய்தனர்.

Similar News

News December 18, 2025

கள்ளக்குறிச்சி: போலீசாருக்கே மிரட்டல் விடுத்த 5 பேர்!

image

கள்ளக்குறிச்சி: செட்டித்தாங்கலில் நேற்று போலீசார் சோதனையில் ஈடுபட்திருந்தனர். அப்போது, கருமகாரிய கொட்டகை அருகே அமர்ந்து சூதாடிய 6 பேர் போலீசாரை பார்த்து தெறித்து ஓடினர். அதில் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்த நிலையில், அவர்கள் போலீசாரையே மிரட்டியுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.70,340 பணம் மற்றும் 3 பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

News December 18, 2025

கள்ளக்குறிச்சி: சாப்பிட சென்றவர் மயங்கி விழுந்து பலி!

image

கள்ளக்குறிச்சி: அகரக்கோட்டாலம் பகுதியைச் சேர்ந்த பச்சமுத்து (51) கூலி வேலை செய்து வருகிறார். நேற்று அவர் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது, ஹோட்டல் வாசலிலேயே திடீரெனெ மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், பச்சமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 18, 2025

கள்ளக்குறிச்சி: தந்தையின் பேராசையால் மகள் விபரீத முடிவு!

image

பல்லவாடியைச் சேர்ந்த லோகநாதன் (49), ஆன்லைன் நிறுவனம் ஒன்று அதிக லாபம் தருவதாக கூறியதை நம்பி தனது பணம் மற்றும் ஊர் பொதுமக்களிடம் வாங்கிய பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால், அந்த நிறுவனம் அவரிடம் மோசடி செய்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வரத் தொடங்கினர். இதனால் மனமுடைந்த அவரது மகள் தேன்மொழி (18) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!