News August 22, 2025

கள்ளக்குறிச்சி: குழந்தை திருமணத்தில் வழக்கு பதிவு

image

உளுந்தூர்பேட்டை அருகே 17 வயது பெண் தனது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சரத்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஆண்டு குழந்தை திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ஆகஸ்ட்-1ஆம் தேதி சிறுமிக்கு இரட்டை குழந்தை பிறந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சரத்குமார் மீது உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று வழக்குபதிந்தனர்.

Similar News

News February 9, 2026

ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற கலைஞர்கள்!

image

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், கள்ளக்குறிச்சி மாவட்ட கைவினைக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூம்புகார் கைத்திறன் விருதுகளை வழங்கினார். அதனை இன்று (09.02.2026), மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து, ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்திடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

News February 9, 2026

கள்ளக்குறிச்சி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

image

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 9, 2026

கள்ளக்குறிச்சி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

கள்ளக்குறிச்சி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!