News December 16, 2025

கள்ளக்குறிச்சி: குட்கா விற்ற பெண் கைது!

image

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையிலான போலீசார் பாவளம் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சாந்தி (வயது 58) என்பவரது மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது கடையில் போலீசார் சோதனை செய்ததில் ரூ.2,700 மதிப்பி–லான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News

News December 18, 2025

கள்ளக்குறிச்சி: மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்ட சிறுவர்கள்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசம்பட்டு கிராமத்தில் இரண்டு சிறுவர்கள், அப்பகுதியில் தனியாக வசித்து வரும் மூதாட்டி வீட்டில் திருடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மூதாட்டியின் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் இணைந்து இரண்டு சிறுவர்களையும் இன்று (டிச.18) மின் கம்பத்தில் கட்டி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News December 18, 2025

கள்ளக்குறிச்சி: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

image

கள்ளக்குறிச்சி, மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN அட்டை தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக எங்கும் அலைய வேண்டியதில்லை. <>இந்த லிங்க்<<>> மூலம் உங்கள் ஆதார் அட்டை, PAN card உடன் இணைக்கப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News December 18, 2025

கள்ளக்குறிச்சி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

image

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!