News February 2, 2026

கள்ளக்குறிச்சி கிராமத்திற்கு விருது!

image

டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவின் போது, அரசின் திட்டப் பணிகளை உடனுக்குடன் செய்து முடித்த சிறந்த கிராமமாக ரங்கப்பனூர் ஊராட்சிக்கு விருது வழங்கப்பட்டது.இதனைப் பெற்றுக் கொண்ட ஊராட்சி தலைவர் அர்ச்சனா காமாராஜ், ரிஷிவந்திடம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திக், கலெக்டர் பிரசாந்த் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

Similar News

News February 9, 2026

கள்ளக்குறிச்சியில் வாலிபர் தற்கொலை!

image

ரிஷிவந்தியம் அடுத்த காட்டுசெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன்(3%). இவருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால், மனமுடைந்த அவர் விஷம் குடித்தார். தொடர்ந்து, மயங்கிக் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 9, 2026

கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

image

தாகம் தீர்த்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் தனது பைக்கில் வி.கூட்டுரோட்டில் இருந்து வீட்டிற்கு செல்ல ராயப்பனூர் பிரிவு சாலையை கடந்தார். அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த BMW கார் மோதிய விபத்தில் அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த இரண்டு கார்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானன. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 9, 2026

கள்ளக்குறிச்சியில் இன்று டாஸ்மாக் இயங்காது!

image

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று(பிப்.9) மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் அடையாள போராட்டம் நடத்துகின்றனர். ஆகையால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் 3 மணி நேரம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!