News December 6, 2025

கள்ளக்குறிச்சி: காவல்துறை இரவு நேர ரோந்து பணி விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 5-ம் தேதி) இரவு முதல் நாளை (டிசம்பர் 6-ம் தேதி) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 6, 2026

கள்ளக்குறிச்சி கலெக்டர் அதிரடி உத்தரவு!

image

கள்ளக்குறிச்சியில் உள்ள பல்வேறு வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் துறைகளில் பணியாற்றி வந்த 18 துணை வட்டாட்சியர்களை, நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் பிரசாந்த் நேற்று உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பணியிட மாற்றம் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர்கள் அனைவரும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய இடங்களில் உடனடியாகப் பணியில் சேர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

News March 6, 2026

ரிஷிவந்தியம் MLAவின் கனவை தகர்க்கும் தேமுதிக?

image

ரிஷிவந்தியம் MLA வசந்தம் கார்த்திகேயன், இந்தத் தேர்தலில் வென்றால் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2011 தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், பிரேமலதா பார்வை ரிஷிவந்தியம் மீது விழுந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த அரசியல் கணக்கு, வசந்தம் கார்த்திகேயனின் அமைச்சர் கனவை முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உங்க கருத்து என்ன?

News March 6, 2026

தியாகதுருகத்தில் ஒருவர் துடிதுடித்து பலி!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த புது பல்லக்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் நேற்று இரவு மணிமுக்தா நதி கரையில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு வயல்வெளிக்கு நீர் இறைப்பதற்காக வைத்திருந்த மின் மோட்டாரில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!