News June 23, 2024

கள்ளக்குறிச்சி காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்குச் சென்ற பேர் மாயம் என்ற செய்தி பரவி வருகிறது. 7 பேர் சாராய வேட்டை முடித்து ஓய்வுக்காக சிறிது நேரம் அமர்ந்து விட்டு தாமதமாக வந்துள்ளனர். அனைவரும் நலமாக உள்ளதாகவும், தவறான தகவலை பரப்ப வேண்டாம் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 9, 2025

கள்ளக்குறிச்சி எஸ்பி தலைமையில் குறைத் தீர்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சியில் வாராந்திர குறைத்தீர்வு கூட்டம் இன்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் எஸ்.பி. ராஜத் சதுர்வேதி தலைமையில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உள்ள பொதுமக்கள் எஸ்.பி-யை நேரில் சந்தித்து புகார் மனுக்களை கொடுத்தனர். இதுகுறித்து உடனடியாக தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எஸ்.பி அறிவுரைத்தனார்.

News July 9, 2025

கள்ளக்குறிச்சியில் சிறப்பு கடன் தீர்வு திட்டம்

image

கள்ளக்குறிச்சியில் பண்ணை சாரா கடன் மற்றும் இதர நீண்ட கால நிலுவைகளுக்கான சிறப்பு கடன் தீர்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல இணைப் பதிவாளர் முருகேசன் வெளியிட்ட தகவலின்படி, கடன்தாரர்கள் தங்கள் நிலுவைத் தொகையை 9% சாதாரண வட்டியுடன் 2025 செப்டம்பர் 23-க்குள் ஒரே தவணையில் செலுத்த வேண்டும். தவணை தவறிய கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவுகள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.

News July 9, 2025

வெற்றி நிச்சயம் திட்டத்திற்கு தேவையான தகுதிகள் 2/2

image

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்த 18 -35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், வேலை தேடுபவராகவும் படிப்பை பாதியில் நிறுத்தியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு, வோட்டர் ஐடி, வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின்னஞ்சல் ஐடி& மொபைல் எண் ஆகியவை கட்டாயம் தேவைப்படுகின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரவும்

error: Content is protected !!