News December 25, 2025

கள்ளக்குறிச்சி: கார் மோதி தூக்கி வீசப்பட்ட நபர்!

image

கள்ளக்குறிச்சி: திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் (40). இவர் நேற்று பைக்கில் சாலையை கடந்துள்ளார். அப்போது, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விஜய் என்பவர் ஓட்டி வந்த கார், சௌந்தர்ராஜன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 26, 2025

கள்ளக்குறிச்சி தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

image

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று நள்ளிரவு கள்ளக்குறிச்சி நேபால் தெரு புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கன்னிமரியாள், சூசையப்பர், குழந்தை ஏசு, மூன்று ஞானிகள் குடிலில் எழுந்தருளச் செய்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து இரவு 12:00 மணிக்கு திருப்பலி நடந்தது. கிறிஸ்தவர்கள் பலர் குடும்பத்துடன் வந்து வழிபட்டனர்.

News December 26, 2025

“விஜயை யாரோ ஆட்டி வைக்கின்றனர்” – ம.தி.மு.க நிர்வாகி காட்டம்

image

உளுந்துார்பேட்டையில் ம.தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் செந்திலதிபன் பங்கேற்று, சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். அப்போது, “த.வெ.க., தலைவர் விஜயை யாரோ ஆட்டி வைக்கின்றனர், பிறர் எழுதிக்கொடுக்கும் வசனத்தை பேசி பழக்கப்பட்டவர். போக, போக அவர் யார் என தெரியும், விஜயின் சாயம் வெளுக்கும்” என்று பேசினார்.

News December 26, 2025

கள்ளக்குறிச்சி வாக்காளர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கள்ளக்குறிச்சி மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், 2026-ஜனவரி 1-ல் 18 வயது நிறைவடையும் முதல் முறை வாக்காளர்கள், தங்களது பெயரை சேர்க்க அல்லது பெயர், உறவுமுறை, முகவரி ஆகியவற்றை மாற்றம் செய்யும் பொருட்டு படிவங்கள் பெற வரும் 27, 28 ம் தேதி, வரும் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

error: Content is protected !!