News November 21, 2025
கள்ளக்குறிச்சி: காதலித்து ஏமாற்றிய நபர் மீது வழக்கு!

கள்ளக்குறிச்சி: அரியலூரை சேர்ந்த மகேஸ்வரியும் அதே பகுதியை சேர்ந்த பிரவீன் குமாரும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை தனிமையில் இருந்த பிரவீன்குமார், தற்போது திருமணம் செய்து கொள்ள கேட்டபோது மகேஸ்வரியை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பிரவீன் குமார் மீது நேற்று (நவ.21) போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News November 21, 2025
கள்ளக்குறிச்சி: பெண்ணுக்கு கொலைமிரட்டல் – மக்கள் அச்சம்!

கள்ளக்குறிச்சி, மூக்கனூரை சேர்ந்த ராதா,கோவிந்தராசு இவர்களுக்கு நிலத்திற்கு செல்லும் வழிப்பாதை சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதில் கடந்த 10ம் தேதி ராதா தனது வீட்டின் சுவரை பூசிக்கொண்டு இருக்கும்போது, அங்கு வந்த செல்லன்,முனியம்மாள்,கோவிந்தராசு,அனிதா ஆகியோருடன் சேர்ந்து ராதாவை திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் 4 பேர் மீது போலீசார் வழக்குபதிந்தனர்.
News November 21, 2025
கள்ளக்குறிச்சி: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி! APPLY NOW!

கள்ளக்குறிச்சி மக்களே,எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச.2-க்குள்<
News November 21, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை 2024-26 ஆண்டிற்கான பொதுகணக்கு குழு வரும் நவ.24-ஆம் தேதி, மாவட்டத்தில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சட்டமன்ற பொதுகணக்கு குழுவினரிடம் மக்கள் கோரிக்கை மனுக்களும் அளிக்கலாம். என ஆட்சியர் பிரசாந்த் இன்று (நவ.21) அறிவித்துள்ளார்.


