News September 14, 2025
கள்ளக்குறிச்சி: கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அறிவிப்பு

கள்ளக்குறிச்சி, நீலமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் செப்டம்பர் 15 அன்று ‘தமிழோடு விளையாடு’ போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம். மாணவர்களைப் பங்கேற்கத் தயார் செய்யும்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
Similar News
News September 14, 2025
கள்ளக்குறிச்சி: BE/ B.Tech, B.Sc/M.Sc படித்திருந்தால் 1,56,500 வரை சம்பளம்

மகாராஷ்டிரா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டேட்டா அனலிஸ்ட், ஜாவா டெவலப்பர், டேட்டா இன்ஜினியர் போன்ற பல பணிகளுக்கு BE/ B.Tech, B.Sc/M.Sc, CA டிகிரி முடித்த 22-35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் 85,000-1,56,500 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த லிங்கை <
News September 14, 2025
கள்ளக்குறிச்சி: கத்தியை காட்டி 6 சவரன் நகை பறிப்பு

சோமண்டார்குடியை சேர்ந்த கல்கி (27), தனியார் கடை ஊழியர். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு ஸ்கூட்டரில் திரும்பியபோது, 3மர்ம நபர்கள் அவரது ஸ்கூட்டரை வழிமறித்துள்ளனர். கல்கி கீழே விழுந்ததும், மர்ம நபர்கள் அவரிடமிருந்த ஒன்றரை சவரன் தங்க சங்கிலி மற்றும் கத்தியைக் காட்டி 6சவரன் தங்க நகைகளையும் பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News September 14, 2025
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்று 14 காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி 1கிலோ மதிப்பீட்டில் தக்காளி ரூ.20 பச்சை மிளகாய் 50 கொத்தவரங்காய் ரூ.35 வெண்டைக்காய் ரூபாய் 30 புடலங்காய் ரூபாய் 40 கத்தரிக்காய் ரூபாய் 40 அவரைக்காய் ரூபாய் 50 சுரைக்காய் ரூபாய் 20 பூசணி ரூபாய் 25 பரங்கி ரூபாய் 20 உருளைக்கிழங்கு ரூபாய் 30 சேப்பங்கிழங்கு ரூபாய் 40 முருங்கைக்காய் ரூபாய் 60 என விற்பனையாகிறது.