News November 17, 2025
கள்ளக்குறிச்சி: ஏரியில் மிதந்த பிணம்! கொலையா?

கள்ளக்குறிச்சி: எலவனாசூர்கோட்டை, தளபதி நகர் பகுதியை சேர்ந்தவர் ரகமத்துல்லா (46). இவர் கடந்த 13ம் தேதி காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள குளத்தில் பிணமாக மிதந்தார். தொடர்ந்து அவரது உடல் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது கொலையா? இல்ல விபத்தா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 17, 2025
கள்ளக்குறிச்சி விவசாயிகளுக்கு ஆட்சியர் நற்செய்தி!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் ராபி 2025 பருவத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட குறுவட்டங்களில் மரவள்ளி, கத்தரி, வெங்காயம் ஆகிய தோட்டக்கலை பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் தேசிய பயிர் காப்பீடு வலைத்தளம் (http://www.pmfby.gov.in/) பயிர் காப்பீடு செயலியை பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
கள்ளக்குறிச்சியில் 941 பேர் ஆப்சென்ட்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.16), தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2, 29 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத மொத்தம் 9,240 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தேர்வு எழுத 8,299 பேர் மட்டுமே ஆர்வமுடன் வந்திருந்தனர். மீதம், 941 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
கள்ளக்குறிச்சி: B.E/B.Tech படித்தால் ரூ50,000!

கள்ளக்குறிச்சி: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே<


