News August 6, 2025

கள்ளக்குறிச்சி: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆகஸ்ட் 6-ம் தேதி திருக்கோவிலூர் ராஜேஸ்வரி திருமண மண்டபம்,கச்சிராயப்பாளையம் V.S.A மஹால்,மாடூர் நித்தின் மஹால்,விருகாவூர் இந்திரா ரங்கசாமி மண்டபம்,எஸ்.வி.பாளையம் பஜனை கோயில் தெரு,காட்டு எடையார் சிவன் கோயில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் முகாமில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப்பெறாத பெண்கள் இம்முகாமில் கலந்து கொண்ட விண்ணப்பிக்கலாம்.

Similar News

News August 6, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் – ஓர் பார்வை!

image

கள்ளக்குறிச்சி, தமிழ்நாட்டின் 34-ஆவது மாவட்டமாக 8 ஜனவரி 2019 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க 40 ஆண்டு காலமாக அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா. இந்த மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 2 வருவாய் கோட்டங்கள், 7 வட்டங்கள், 24 உள்வட்டங்கள், 6 பேரூராட்சி, 412 ஊராட்சி உள்ளன. ஷேர் பண்ணுங்க!

News August 6, 2025

கள்ளக்குறிச்சி இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News August 6, 2025

கள்ளக்குறிச்சியில் VAO மீது புகார் அளிப்பது எப்படி?

image

குடிமக்கள் கோரும் சான்றிதழ்களை தராமல் இழுத்தடித்தாலோ, சம்மந்தப்பட்ட கிராமத்தில் VAO வசிக்காவிட்டாலோ VAO மீது கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலரிடம் (04151-228802) நேரடியாக புகார் அளிக்கலாம். அளிக்கப்படும் புகார்களுக்கு 3 – 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். VAO மீது கொடுக்கப்படும் புகார் உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வேறொரு VAO நியமிக்கப்படுவார். ஷேர்!

error: Content is protected !!