News September 17, 2025

கள்ளக்குறிச்சி: ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் உதவி

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆவின் நிறுவனத்தின் சார்பில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, வெண்நிதி திட்டத்தின் கீழ், நுண்கடன்களுக்கான காசோலைகள் இன்று (செப்.17) வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், இந்த காசோலைகளை வழங்கினார். இதில், ஆவின் சங்க நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Similar News

News March 4, 2026

இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருதுகள் 2025-க்கான விருது

image

வீரசோழபுரம் பகுதியில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வனத்துறையின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. “இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருதுகள் 2025-க்கான விருது” குயிலி தனியார் தொண்டு நிறுவனத்திற்கு கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News March 4, 2026

2026 மற்றும் 2027 ஆம் ஆண்டிற்கான இலக்கு நிர்ணய கூட்டம்

image

வீரசோழபுரம் பகுதியில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வனத்துறையின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டிற்கான இலக்கு நிர்ணய கூட்டம் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் (மார்ச்.3) நடைபெற்றது. இதில் மாவட்ட அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News March 3, 2026

கள்ளக்குறிச்சி: நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு<> கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

error: Content is protected !!