News August 26, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் மாணவர்களுக்கு அறிவுரை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் நன்கு படித்து, நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என, மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர், தெரிவித்துள்ளார்.
Similar News
News August 26, 2025
கள்ளக்குறிச்சி கால்வாய் பிரச்னையில் கொலை மிரட்டல்

எடுத்தவாய்நத்தத்தை சேர்ந்த கோபிநாத், திருமால் இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள். கோபிநாத் மனைவி சுந்தரி வீட்டின் முன்பு கழிவுநீர் கால்வாயில் இருந்த வாட்டர் பாட்டில், குப்பைகளை அகற்றும் போது திட்டியதாகவும், இதனை கேட்ட திருமால், திருநாவுக்கரசு, மாயகிருஷ்ணன், நைனாம்மாள் ஆகியோர் சேர்ந்து கோபிநாத்தை கல்லால் அடித்து கொலைமிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரில் நேற்று 4பேர் மீது வழக்குபதிந்தனர்.
News August 25, 2025
16 பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கம்

தமிழகத்தில் உள்ள நகராட்சி & பேரூராட்சி பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை நாளை தமிழ்நாடு முதலமைச்சர் விரிவாக்கம் செய்கிறார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் உளுந்தூர்பேட்டை,மணலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 16அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலைஉணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
News August 25, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி விவரங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.