News November 12, 2024
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகள் இல்லங்களில் உள்ள 6-18 வயது குட்பட்ட குழந்தைகளை வளர்ப்பதற்கு வளர்ப்பு பெற்றோர்கள் தேவை என்றும், ஆதரவற்ற குழந்தைகளை தற்காலிக குடும்ப சூழல்களில் வாழ வழிவகை செய்ய விருப்பம் தெரிவிக்கும் பெற்றோர் விண்ணப்பம் செய்தலுக்கான வழிமுறைகள், நடைமுறை நிபந்தனைகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
Similar News
News September 10, 2025
குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் மாதாந்திர ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (10.09.2025) நடைபெற்றது.இதில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கேட்டறிந்து ஆய்வு செய்தார்
News September 10, 2025
கள்ளக்குறிச்சி இரவு நேர ரோந்து பணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (செப்.,10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
ஆட்சியர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள வீரசோழபுரம் பகுதியில் பொதுப்பணி துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் கட்டுமான பணியினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்