News September 30, 2024

கள்ளக்குறிச்சி அருகே 800 லிட்டர் கள்ள சாராய ஊறல் அழிப்பு

image

கல்வராயன்மலையில் உள்ள அருவங்காடு வனப்பகுதியில் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக கரியாலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கரியாலூர் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அருவங்காடு வனப்பகுதியில் ரெய்டில் ஈடுபட்டனர்.அங்கு சாராய ஊறலை பார்த்த போலீசார் ஊறலை அழித்தனர்.இதில் அண்ணாமலை என்பவரை கைது செய்தனர்.இப்பகுதியில் சாராய உற்பத்தி என்பது தொடர்கதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 7, 2025

கள்ளக்குறிச்சி: சந்திர கிரகணத்தைக் காண ஏற்பாடு

image

திருக்கோவிலூர் அண்ணா நகர் (மாருதி நகர் அருகில்), நூலக மற்றும் அறிவுசார் மைய வளாகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட வானியல் மன்றம் சார்பில், இன்று (செப்.7) இரவு 9:30 மணி முதல் திங்கள் அதிகாலை 1:00 மணி வரை, தொலைநோக்கி மூலம் முழு சந்திர கிரகணத்தைக் காண பொதுமக்களுக்கு இலவச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தகவலை, மாவட்டத் தலைவர் ஜி.ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.

News September 7, 2025

சிறந்த காவல் நிலையத்திற்கான கேடயம் பெற்ற எஸ்ஐ

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்ததடுக்கப்பட்டது. அதற்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தை இன்று தமிழக DGP வெங்கட்ராமன், ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம் வடக்கு மண்டல ஜஜி ஆஸ்ரா கர்க் ஆகியோர் முன்னிலையில் கச்சிராயபாளையம் உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் பெற்று கொண்டார்.

News September 7, 2025

கள்ளக்குறிச்சி: அவசர கால உதவி எண்கள் இதோ!

image

கள்ளக்குறிச்சி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
▶ தீயணைப்புத் துறை- 101
▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
▶ போக்குவரத்து காவலர்- 103
▶ பெண்கள் பாதுகாப்பு- 181 & 1091
▶ ரயில்வே விபத்து அவசர சேவை- 1072
▶ சாலை விபத்து அவசர சேவை- 1073
▶ பேரிடர் கால உதவி- 1077
▶ குழந்தைகள் பாதுகாப்பு- 1098
▶ சைபர் குற்றங்கள் தடுப்பு- 1930
▶ மின்சாரத்துறை- 1912
பதிவு செய்துக்கொண்டு மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!