News June 28, 2024
கள்ளக்குறிச்சி: அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்

அதிகாரிகள், ஆளும் கட்சியினர், காவல்துறை உதவியுடன் கள்ளசாராயம் காய்ச்சப்படுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். கடந்த ஆண்டு கள்ளச்சாராய மரணத்தின்போதே அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என இன்று ஆளுநரை சந்தித்த பின் பேட்டியளித்துள்ளார். மேலும், இந்த கள்ளக்குறிச்சி விவகாரத்தில் துறை சார்ந்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பிரேமலதா சாடியுள்ளார்.
Similar News
News August 28, 2025
கள்ளக்குறிச்சி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539622>>தொடர்ச்சி<<>>
News August 28, 2025
இந்த திட்டத்திற்கான தகுதிகள்

இந்த திட்டத்தில் பயன்பெற குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். SHARE செய்யுங்க
News August 28, 2025
கள்ளக்குறிச்சி: ஆன்லைன் மோசடியில் ரூ.41 லட்சம் இழப்பு

சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் பொன்முடி. இவர் சமூகவலைதளத்தில் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்ற விளம்பரத்தை பார்த்து பல்வேறு தவணைகளாக ரூ.41 லட்சத்து 75 ஆயிரத்தை ஆன்லைன் மூலமாக மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். கமிஷன் தொகை கிடைக்காததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இதுகுறித்து சைபர் கிரைமில்(1930) மற்றும் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார். உஷாரா இருங்க மக்களே. SHARE பண்ணுங்க