News January 4, 2026
கள்ளக்குறிச்சியை அதிர வைத்த கொலை – பகீர் பின்னணி!

சங்கராபுரத்தில் நேற்று மருமகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருமகள் நந்தினி (29), தனது மகன் ரியோ-வை (36) 2-வது திருமணம் செய்துகொண்டது பிடிக்கவில்லை என்பதால், மாந்திரீகம் செய்வதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார் மாமியார் மேரி. பின்னர், மேரி தனது தோழியுடன் சேர்ந்து தலை வேறு, உடல் வேறு இடத்தில் புதைத்ததை ஒப்புகொண்டார். அதைத்தொடர்ந்து 2 பேரும் கைதாகினர்.
Similar News
News February 4, 2026
கள்ளக்குறிச்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.
News February 4, 2026
சங்கராபுரம்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் பத்ரிநாத்(24). கூலித் தொழிலாளியான இவருக்கும் சங்கராபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றதாக சமூக நல விரிவாக்க அலுவலகத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
News February 4, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (பிப்.3) இரவு முதல் இன்று (பிப்.4 ) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


