News January 28, 2026

கள்ளக்குறிச்சியில் 30ஆம் தேதி குறைதீர் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற ஜன.30 ஆம் தேதி காலை 11 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் தெரிவித்துள்ளார். இதில் மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை தோட்டக்கலை துறை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் உள்ளிட்ட துறைகள் பங்கேற்க உள்ளனர். இதில் விவசாயிகள் பங்கேற்ற பயன்பெறுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News January 30, 2026

கள்ளக்குறிச்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 30, 2026

‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ !

image

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் அரசுப் பேருந்துகளில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
எம்.எஸ்.பிரசாந்த் இன்று (30.01.2026) பேருந்துகளில் ஒட்டி விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உள்ளிட்டப் பலர் இருந்தனர்.

News January 30, 2026

SP தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு!

image

இந்திய சுதந்திர போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டும். அந்நாளில் தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

error: Content is protected !!