News December 25, 2025

கள்ளக்குறிச்சியில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

image

கள்ளக்குறிச்சி பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். SHARE NOW!

Similar News

News December 27, 2025

கள்ளக்குறிச்சி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

image

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 27, 2025

கள்ளக்குறிச்சி இல்லத்தரசிகளுக்கு அரிய வாய்ப்பு!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., ஏழைப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ‘LIC’ மூலம் ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ எனும் மத்திய அரசு திட்டம் உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி, மாதம் ரூ.7,000 முதல் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையில் கமிஷன்களும் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் அவர்கள் எல்.ஐ.சி முகவராகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க.( SHARE IT)

News December 27, 2025

கள்ளக்குறிச்சி: வலிப்பு வந்ததால் ஆற்றில் மூழ்கிய நபர்!

image

கள்ளக்குறிச்சி: திருவண்ணாமலையை சேர்ந்த கிருஷ்ணமூா்த்தி (45), மணலூர்பேட்டைக்கு வேலைக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளார். அந்த சமயம் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் நீரில் மூழ்கினார். இதை கண்ட அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!