News January 27, 2026
கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் ஜனவரி 30 ஆம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அறிவித்துள்ளார். இந்த விவசாயிகள் துறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளதாகவும், இதில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 5, 2026
ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் “என் ஊர், என் கனவு” மாவட்ட தொலைநோக்குத் திட்டம் தயாரிப்பது குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (05.02.26) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் புதிதாக அறிவித்துள்ள இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
News February 5, 2026
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் பேரூராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், தலைமையில் இன்று (05.02.2026) நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News February 5, 2026
கள்ளக்குறிச்சி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

கள்ளக்குறிச்சி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


