News January 6, 2026

கள்ளக்குறிச்சியில் வாலிபர் துடிதுடித்து பலி!

image

ராமநத்தம் அடுத்துள்ள வாகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(28). இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக ப்சொந்த ஊருக்கு வந்த இவர், நேற்று(ஜன.5) மதியம் நண்பர்களுடன் அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றார். அப்போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News January 26, 2026

கிராம உதவியாளருக்கு சான்று வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உ. நெமிலி கிராமத்தில் பணிப்புரியும் கிராம உதவியாளர் ஏழுமலைக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று நற்சான்றிதழ் வழங்கி அவரை கௌரவித்தார். இந்த நிகழ்வின்போது திருக்கோவிலூர் கோட்டாட்சியர் ராஜசேகர் சிங் உடன் இருந்தார்.

News January 26, 2026

கள்ளக்குறிச்சி: டிகிரி முடித்தவர்களுக்கு செம வாய்ப்பு!

image

மத்திய அரசு வங்கியான UCO (யூகோ) வங்கியில் காலியாக உள்ள 173 Generalist & Specialist Officer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E/B.Tech/M.Sc/MBA/MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த<> லிங்கை <<>>கிளிக் செய்து, வரும் பிப்ரவரி.02 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர்!

News January 26, 2026

கள்ளக்குறிச்சியில் 250 நாட்டுக் கோழிகள் இலவசம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!