News December 26, 2025
கள்ளக்குறிச்சியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ரூ.139 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கவும், பல்வேறு நலத்திட்ட பணிகளை வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Similar News
News January 5, 2026
கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

திருநாவலூர் ஒன்றியம் காம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்த நீதிதாஸ் என்பவர் கடந்த ஜூன்.3 ஆம் தேதி சேலம் சாலை, ஆத்தூர் அருகே சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 5, 2026
கள்ளக்குறிச்சியில் மின் தடை!

சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளால் நாளை(ஜன.6) சங்கராபுரம், பாண்டலம், வட சிறுவள்ளூர், வடசெடீயந்தல், திம்மனந்தல், கிடங்குடையாம்பட்டு, ஆரூர், ராமராஜபுரம், பூட்டை, செம்பராம்பட்டு, அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சபுத்தூர், பொய்யாக்குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், எஸ்.குளத்தூர், மேலேரி, கீழப்பட்டு, தும்பை, கூடலூர் பகுதிகளில் காலை 9 – 2 மணி வரை மின் தடை. <
News January 5, 2026
புதுப்பட்டு பகுதிகளில் மின் தடை

புதுப்பட்டு, ரங்கப்பனூர், மூலக்காடு, கொடியனூர், பவுஞ்சிப்பட்டு, ஆணைமடுவு, லக்கிநாயக்கன்பட்டி, சேராப்பட்டு, இன்னாடு, புத்திராம்பட்டு, மல்லாபுரம், பாவளம், ராவுத்தநல்லூர், பிரம்மகுண்டம், புளியங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 – மதியம் 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


