News January 7, 2026
கள்ளக்குறிச்சியில் மின்தடை – இதில் உங்க ஏரியா இருக்கா?

கள்ளக்குறிச்சி, எடுத்தவாய்நத்தம் மற்றும் மூங்கில்பாடி துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.8) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சர்க்கரை ஆலை பகுதி, நீலமங்கலம், மேல்நாரியப்பனூர், திம்மாபுரம், தென்பொன்பரப்பி, எடுத்தவாய்நத்தம், கரடிசித்தூர், அரசம்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 8, 2026
கள்ளக்குறிச்சியில் நடுரோட்டுக்கு வந்த மக்கள்!

சங்கராபுரம் அருகே சிவபுரத்தில் 38-க்கும் மேற்பட்டவர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த இடத்தை தங்களுக்கு பட்டா போட்டு தருமாறு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், தங்களுக்கு விரைந்து பட்டா வழங்க வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் வந்து சமாதானம் செய்த பின்னர் கலைந்து சென்றனர்.
News January 8, 2026
கள்ளக்குறிச்சியில் பூட்டிய வீடுதான் TARGET – உஷார்!

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகேயுள்ள டி.கீரனூரைச் சேர்ந்தவர் ராணி (55). இவா் கடந்த 5-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு, பெங்களூரு சென்றுள்ளார். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.1.20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 8, 2026
கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஜனவரி 7-ம் தேதி இரவு முதல் நாளை (ஜன.08) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


