News January 30, 2026
கள்ளக்குறிச்சியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மஹாலில் ‘உலகம் உங்கள் கையில் திட்டத்தின்’ கீழ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்துகொண்டு மடிக்கணினிகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
Similar News
News February 17, 2026
கள்ளக்குறிச்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 17, 2026
கள்ளக்குறிச்சி: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

கள்ளக்குறிச்சி மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <
News February 17, 2026
கள்ளக்குறிச்சி: விவசாயி வீட்டில் நகை திருட்டு

கள்ளக்குறிச்சி, ஏர்வாய்பட்டினத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் விவசாயி, இவரது மனைவி காவியாதமிழ். இந்த தம்பதியினர் நேற்று காலை வயலுக்கு சென்றனர். மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் வைத்திருந்த 1½ பவுன் நகையை காணவில்லை. இது குறித்து காவியாதமிழ் கொடுத்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


