News February 26, 2026
கள்ளக்குறிச்சியில் போலீஸை தாக்கிய வாலிபர்!

உளுந்தூர்பேட்டை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மணிவண்ணன்(51). இவர், நேற்று முன் தினம் தியாகதுருகம் அடுத்த சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் தேர் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது, அங்கு அதிவேகமாக வந்த பைக்கை தடுத்து நிறுத்த முயன்றார். இதனால், ஆத்திரமடைந்த பைக்கில் வந்த பச்சமுத்து(25) என்பவர் மணிவண்ணை திட்டி, தாக்கியுள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 1, 2026
கள்ளக்குறிச்சி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
ரிஷிவந்தியம் 200 மடங்கு வளர்ந்துள்ளது – MLA பெருமிதம்!

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான வசந்தம் கார்த்திகேயன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கள்ளக்குறிச்சி வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதிலும், ரிஷிவந்தியம் தொகுதி 200% வளர்ச்சி அடைந்துள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றவர்கள் மனசாட்சியோடு வாக்களித்தாலே சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றிபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
News March 1, 2026
கள்ளக்குறிச்சி: வருவாய் ஆய்வாளர் பரிதாப பலி!

வெள்ளிமலையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பெரியசாமி. இவர் தனது நண்பர் சத்யராஜுடன் நேற்று முன்தினம் பைக்கில் சென்றுள்ளார். அப்போது சாலையோரம் நின்ற லாரி மீது பைக் மோதியதில், சத்யராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமியும் நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த போலீசார், லாரி ஓட்டுநர் சிவாவை கைது செய்துள்ளனர்.


