News February 7, 2026
கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!

கள்ளக்குறிச்சி அருகே பெரியசிறுவத்துாரைச் சேர்ந்த அஞ்சலி (27) என்பவருக்கு, கடந்த 2023-ல் பிரகாஷ் என்பவருடன் திருமணமாகி ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், ஏற்கனவே வரதட்சணை அளிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ரூ. 2 லட்சம் பணம் கேட்டு பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அஞ்சலியை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், கணவர் பிரகாஷ் உட்பட 5 பேர் மீது 2 போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Similar News
News February 10, 2026
கள்ளக்குறிச்சியில் பயங்கர விபத்து!

விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து, பாதூர் என்ற இடத்தில் முன்னால் சென்ற லாரி மீது பேருந்து மோதியது.இதில், பேருந்தில் பயணம் செய்த ஆறு பேர் படுகாயமடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 10, 2026
கள்ளக்குறிச்சி: சிறுமியை திருமணம் செய்த வாலிபர்!

வாணாபுரம் அருகே உள்ள கரையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பேரரசன்(27). தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றதாக ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலகத்திற்கு புகார் சென்றது. இதுகுறித்த விசாரணையில், சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பேரரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர்.
News February 10, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


