News March 9, 2026
கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

சின்னசேலம் அருகே நாககுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், கடந்த மார்ச் 7ஆம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு பாண்டியன் குப்பம் சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்தார். அதன் பின்னே வந்த லாரி எதிர்பாராத விதமாக சுரேஷ் வாகனத்தின் மீது மோதியது. இதில் சுரேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 15, 2026
கள்ளக்குறிச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கள்ளக்குறிச்சி மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT
News March 15, 2026
கள்ளக்குறிச்சி: இ-ஸ்கூட்டர் வாங்க வேண்டுமா?

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.<
அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 15, 2026
புதிய மாவட்ட SP அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்கப்படவுள்ளது. அதனை முன்னிட்டு அடிக்கல் நாட்டு விழா இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் இன்று தலைமையில் நடைபெற்றது.


