News February 5, 2026
கள்ளக்குறிச்சியில் கொந்தளித்த மக்கள்!

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் அரசு பஸ் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதனை கண்டித்து பயணிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுப்படுத்தினர். பின்னர் மாற்று ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
Similar News
News February 6, 2026
கள்ளக்குறிச்சியில் அரசு வழங்கும் இலவச வீடு! DONT MISS

கள்ளக்குறிச்சி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
கள்ளக்குறிச்சியில் துணிகரத் திருட்டு!

ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார்(28). சம்பவத்தன்று தனது பைக்கை சேலம் சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே நிறுத்தி விட்டு, திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. அதை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 6, 2026
உளுந்தூர்பேட்டை: கேஸ் சிலிண்டர் அடியில் இருந்த பாம்பு!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மனங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(42). கூலித் தொழிலாளியான இவரது வீட்டு சமையல் அறை, கேஸ் சிலிண்டர் அடியே 6 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.


