News March 14, 2026
கள்ளக்குறிச்சியில் கிணற்றில் மிதந்த சடலத்தால் பரபரப்பு!

கள்ளக்குறிச்சி: ஈசாந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது 2-வது மகன் சபரி குமார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில், சபரி குமார் நேற்று முன்தினம் காணாமல் போனார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரது கிணற்றில் சடாமலாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து கீழ்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 27, 2026
மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் பயிற்சி வகுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் தலைமையில் இன்று மார்ச் 27-ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News March 27, 2026
கள்ளக்குறிச்சி: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

கள்ளக்குறிச்சி மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News March 27, 2026
கள்ளக்குறிச்சி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


