News August 11, 2025
கள்ளக்குறிச்சியில் இங்கு போனால் குழந்தைபேறு நிச்சயம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோயிலின் சிறப்புகள் தெரியுமா? இங்கு முக்கிய தெய்வமாக விளங்குபவர் அரவான். சித்திரை மாத பௌர்ணமி அன்று திருநங்கைகள் அரவானை மணப்பது வழக்கம். திருமணத்திற்கு அடுத்தநாள் அரவாண் உயிர் கொடுக்கும் நாளாக கருதப்படுகிறது. அன்று அளிக்கப்படும் உறுமை சோறை உண்டால் குழந்தைபேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!!
Similar News
News August 11, 2025
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
News August 11, 2025
மாவட்ட ஆட்சியரகத்தில் 370 மனுக்கள் பெறப்பட்டதாக அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று நேரடியாக பெற்றுக்கொண்டார். இதில் பட்டா மாறுதல், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தமாக 370 மனுக்கள் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 11, 2025
கள்ளக்குறிச்சியில் நடந்த இந்த அதிசயத்த பாருங்க!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள சேந்தமங்கலத்தில் மனித முக அமைப்புடன் ஒரு ஆட்டுக்குட்டி பிறந்த அதிசயம் நடந்துள்ளது. ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான ஆடு ஈன்ற 2 குட்டிகளின் ஒரு குட்டி மனித முக அமைப்புடன் இறந்த நிலையில் பிறந்துள்ளது. இந்த அதிசயத்தை சுற்றுவட்டார பகுதி மக்கள் கண்டு வியந்தனர். இன்னும் இது பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க.!