News May 3, 2024

கள்ளக்குறிச்சியின் தும்பராம்பட்டு குகை!

image

கல்வராயன் மலைத்தொடரில் உள்ள தும்பராம்பட்டு கிராமத்தின் அருகில் அமைந்துள்ளது தும்பராம்பட்டு குகை. குகைக்கு செல்லும் வழியில் தொட்டிமடுவு என்னும் சிற்றோடு இயற்கையோடு அமைந்துள்ளது. மிகச்சிறிய குகையான இதில் ஆதி மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்கள் பொரிக்கப்பட்டுள்ளது. மனிதன், வேட்டைநாய், காளைமாடு உருவங்களும், மக்கள் நடனமாடுவது போன்ற உருவங்களும் பாறையில் பொரிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 26, 2025

கள்ளக்குறிச்சி கால்வாய் பிரச்னையில் கொலை மிரட்டல்

image

எடுத்தவாய்நத்தத்தை சேர்ந்த கோபிநாத், திருமால் இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள். கோபிநாத் மனைவி சுந்தரி வீட்டின் முன்பு கழிவுநீர் கால்வாயில் இருந்த வாட்டர் பாட்டில், குப்பைகளை அகற்றும் போது திட்டியதாகவும், இதனை கேட்ட திருமால், திருநாவுக்கரசு, மாயகிருஷ்ணன், நைனாம்மாள் ஆகியோர் சேர்ந்து கோபிநாத்தை கல்லால் அடித்து கொலைமிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரில் நேற்று 4பேர் மீது வழக்குபதிந்தனர்.

News August 26, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் மாணவர்களுக்கு அறிவுரை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் நன்கு படித்து, நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என, மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர், தெரிவித்துள்ளார்.

News August 25, 2025

16 பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கம்

image

தமிழகத்தில் உள்ள நகராட்சி & பேரூராட்சி பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை நாளை தமிழ்நாடு முதலமைச்சர் விரிவாக்கம் செய்கிறார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் உளுந்தூர்பேட்டை,மணலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 16அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலைஉணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!