News April 15, 2025

கள்ளக்காதலியை எரித்து கொன்ற ஆட்டோ ஓட்டுனரும் உயிரிழப்பு

image

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த நுாரிஷாவுக்கும்(42) திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான டில்லிபாபுக்கும்(47) தகாத உறவு இருந்துள்ளது. இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் டில்லிபாபு திடீரென பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதுடன், நுாரிஷாவையும் கட்டி பிடித்துக் கொண்டார். இதில் கடந்த 11ம் தேதி நுாரிஷா உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று டில்லிபாபுவும் பலியானார்.

Similar News

News January 31, 2026

திருவள்ளூர்: இங்கு சென்றால் திருமணம் நிச்சயம்!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., அரக்கோணம் செல்லும் வழியில் உள்ள திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் சமேத வசீஸ்வரர் கோயில் உள்ளது. வெகு நாட்களாக திருமணம் ஆகாதவர்கள், இங்குள்ள தங்காதலி தேவியை வழிபட்டால் தடை நீங்கி உடனே திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. காலை: 6:00 – 12:00, மாலை 4:00 – இரவு 8:00 மணி வரை நடை திறக்கும். கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து பஸ், ஷேர் ஆட்டோவில் இங்கு செல்லலாம்.( SHARE IT)

News January 31, 2026

திருவள்ளூரில் அதிரடி கைது!

image

மப்பேடு எறையாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(37). இவர் நேற்று முன் தினம் திருவள்ளூர் தீயணைப்பு நிலையம் அருகே தனது மகனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் இருந்த 3 பேர் விஜயகுமாரிடம் வழி கேடுள்ளனர். மேலும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், அவரைத் தாக்கினர். இந்நிலையில், ராஜேஷ்(19), சங்கர்(22), சந்துரு(20) ஆகியோரை திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.

News January 31, 2026

ஆவடியில் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் கால்நடைத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி ஆணையினை பெற்று கொடுத்து ரூ.14,49,000/- பண மோசடி செய்த வழக்கு நடைபெற்று வந்தது. இதில் தொடர்புடைய நாகராஜன் என்ற நபரை நேற்று(ஜன.30) போலீஸ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.

error: Content is protected !!