News March 21, 2025

களைக்கொல்லி குடித்தவர் பலி

image

கள்ளக்குறிச்சி அழகாபுரத்தை சேர்ந்தவர் பொன்னுவேல்(38). கடந்த 2 ஆண்டுகளாக நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மார்ச்.17ம் தேதி ‘களைக்கொல்லி’ மருந்தை குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்யில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

Similar News

News March 28, 2025

சிறுவனை பாலியல் தொந்தரவு செய்த 17 வயது சிறுவன்

image

உளுந்துார்பேட்டை பகுதியை சேர்ந்த, 7 வயது சிறுவன், இரண்டாம் வகுப்பு படிக்கிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன், பாலியல் தொந்தரவு செய்தார். இது குறித்து புகாரின் பேரில் எடைக்கல் போலீசார், 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தொடர்ந்து அந்த சிறுவனை, விழுப்புரம் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இவர், ஏற்கனவே பைக் திருட்டில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News March 27, 2025

கள்ளக்குறிச்சி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் விவசாயிகள் சார்ந்த விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர்.

News March 27, 2025

2 வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியராக பதவி உயர்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அளவில் வட்டாட்சியர்களாக பணிபுரிந்து வந்த பன்னீர்செல்வம் மற்றும் கமலம் ஆகிய இருவருக்கும் துணை ஆட்சியராக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். பன்னீர்செல்வம் திருவள்ளூர் மாவட்டத்திலும் கமலம் கடலூர் மாவட்டத்திலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!