News July 28, 2024
கல்வி வளர்ச்சிக்கு நிதி வழங்க ஆட்சியர் வேண்டுகோள்

திருப்பூரில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் அனைவரும், உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அரசின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை கல்லூரிக்கு விண்ணப்பிக்காத தாய், தந்தை இல்லாத மாணவர்களுக்கு இன்று 2ஆம் கட்டமாக ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடைபெறுகிறது. இதில், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிதி வழங்க ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News November 8, 2025
திருப்பூர்: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

திருப்பூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News November 8, 2025
திருப்பூர்: வங்கியில் வேலை! APPLY NOW

திருப்பூர் மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவை நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க nabfins.org/Careers/ என்ற முகவரியில் அணுகலாம். கடைசி தேதி 15.11.2025 ஆகும். (SHARE)
News November 8, 2025
வெள்ளகோவில்: விஜயகாந்த் நிலம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஈரோடு(கி) தொகுதி MLA சந்திரகுமார். இவர், 2005ல் தேமுதிக-வில் இருந்தார். அப்போது, விஜயகாந்த் ஏழை மக்களுக்கு வழங்கும் வகையில், வெள்ளகோவில் அருகே 3ஏக்கர் நிலம் வாங்கினார். அப்போது சந்திரகுமார் மீது அந்த நிலம் கிரயம் செய்யப்பட்டது. 2016ல் சந்திரகுமார் திமுகவுக்கு மாறினார். இந்நிலம் குறித்து தேமுதிக சார்பில் கோர்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், நிலத்தை திரும்ப வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.


