News March 3, 2026
கல்வி ஞானத்தை வழங்கும் ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம்!

‘ஓம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்’
பொருள்: கல்வி, ஞானம் மற்றும் வாக்குவன்மைக்கு அதிபதியாக விளங்கும் ஹயக்ரீவப் பெருமாளை நான் தியானிக்கிறேன். அந்த ஞானத்தின் வடிவமானவர், எனது அறிவை ஒளிரச் செய்து, உயர்ந்த அறிவாற்றலை அருளட்டும். SHARE IT.
Similar News
News April 7, 2026
கடும் போராட்டத்திற்கு பின் வேட்புமனு ஏற்பு

திருச்செந்தூரில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. அவரின் 2 மனுக்களையும் ஒரே நபர் முன்மொழிந்ததாகவும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே, தேர்தல் பெற்றதாக பிரமாணப் பத்திரத்தில் குறப்பிடப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் வேட்புமனுவை பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரி, மனுவை ஏற்பதாக அறிவித்தார்.
News April 7, 2026
கருணாநிதிக்கு கேப்டன் மீது அவ்வளவு பாசம்: பிரேமலதா

இவ்வளவு நாள் தவறான கூட்டணியில் இருந்ததாக பிரேமலதா கூறியுள்ளார். கருணாநிதிக்கு விஜயகாந்த் மீது அவ்வளவு பாசம் என்ற அவர், கருணாநிதி CM-ஆக இருந்தபோது சந்திக்க நேரம் கேட்டால் அடுத்த 5-வது நிமிடம் ’வா’ என போன் வரும் என்றார். இதை நினைக்கும்போது ஏன் இவ்வளவு நாள் திமுக உடன் கூட்டணி அமையவில்லை என Feel பண்ணுவதாகவும் கருணாநிதி & விஜயகாந்தின் ஆசிர்வாதத்தால் தற்போது கூட்டணி அமைந்துள்ளது என்றும் பேசியுள்ளார்.
News April 7, 2026
காங்., வேட்பாளருக்கு சொந்த கட்சியினரே எதிர்ப்பு

விளவங்கோடு தொகுதியின் காங்., வேட்பாளர் டி.டி.பிரவீனுக்கு சொந்த கட்சியை சேர்ந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். TN, கேரளாவில் வாக்குரிமை வைத்திருப்பதாக வாதிட்டு, அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதேநேரம், மேலூர் தொகுதியின் காங்., வேட்பாளர் விஸ்வநாதனுக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் உள்ளிட்ட 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.


