News February 24, 2026
கல்விக்கடன் முகாம்: அறிவித்தார் கோவை கலெக்டர்

கோவை மாவட்டத்தில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் வரும் பிப்.26-ம் தேதி சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் பவன்குமார் அறிவித்துள்ளார். கல்விக் கடன் தேவைப்படும் மாணவர்கள், ஆதார் கார்டு, 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தையோ அல்லது அருகில் உள்ள முன்னோடி வங்கியை அனுகவும்.
Similar News
News March 5, 2026
BREAKING: சூலூர் அருகே சுட்டுப் பிடித்த போலீசார்

சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி புதூர் பகுதியில் கத்தியுடன் மிரட்டிய ரவுடி பாலமுருகன், பிடிபடும் போது உதவி ஆய்வாளர் யுவராஜைக் கத்தியால் வெட்டினார். இதைக் கண்ட ஆய்வாளர் பிரேம் ஆனந்த், தற்காப்பிற்காக ரவுடியைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
News March 5, 2026
கோவை: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே<
News March 5, 2026
கோவை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <


