News July 24, 2024
கல்வராயன் மலை பகுதியில் முதல்வர் பார்வையிட வேண்டும்

கல்வராயன் மலை பகுதியில் முதல்வர் அல்லது உதயநிதி சென்று பார்வையிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வராயன் மலைப் பகுதி மக்கள் மேம்பாடு குறித்து தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணை செய்து வருகிறது. அமைச்சர்கள் சென்றால் அதிகாரிகள் நடவடிகை எடுப்பர்கள் என்ற நீதிபதிகள், கல்வராயன் மலைப்பகுதிகளில் சாலை வசதி, ரேஷன் கடைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
Similar News
News March 10, 2026
கள்ளக்குறிச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் நிலவி வரும் வெப்பத் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், கண்டிப்பாகத் தொப்பி அணிந்தோ அல்லது குடை பிடித்தோ செல்ல வேண்டும் எனவும், குடிநீர் பாட்டில்களை உடன் எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தியுள்ளார்.
News March 10, 2026
கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

ராயப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி சாலை பணியாளராக பணியாற்றி வந்த நிலையில், வயிற்று வலி அதிகமானதால் கடந்த 23-ம் தேதி மதுவில் களைக்கொல்லி மருந்தை கலந்து குடித்துள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் நேற்று வழக்குபதிந்தனர்.
News March 10, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (9.3.2026) இரவு முதல் இன்று (10.3.2026) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


