News December 20, 2025

கல்வராயன் மலையை ஆண்டது யார் தெரியுமா?

image

இந்தியா 1947 ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட போது, இயற்கை வனப்பு மிக்க கல்ராயன் மலைப்பகுதிகள் தனியாக தான் இருந்து வந்தது. ஜாகிர்தார்கள் எனப்படும் ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த இப்பகுதி, நீண்ட முயற்சிக்கு பின்னர் 1976-ம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1996-ம் ஆண்டுக்கு பிறகு தான் அப்பகுதி மக்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 25, 2025

கள்ளக்குறிச்சி: POLICE லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

கள்ளக்குறிச்சி மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04151-294600) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 25, 2025

கள்ளக்குறிச்சியில் மர்ம முறையில் ஆடுகள் உயிரிழப்பு!

image

கள்ளக்குறிச்சி: மடத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது பக்கத்து நிலத்துக்காரரான மாடூரைச் சேர்ந்த நாரயணசாமியுடன் அடிக்கடி வரப்பு தகறாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாராயணசாமி பொது வரப்பில் களைக்கொல்லி மருந்து அடித்துள்ளார். அது ரஞ்சித்குமாரின் ஆடுகள் சாப்பிடும் தீவனம் மீது பட்டதாக கூறப்படுகிறது. அதை சாப்பிட்ட 4 ஆடுகளும் மயங்கி விழுந்து உயிரிழந்தன. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 25, 2025

கள்ளக்குறிச்சி: அரசு வேலை ஆசை – ரூ.9 லட்சம் அபேஸ்!

image

உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் ஆறுமுகம், தனது மகனுக்கு அரசு வேலைக்கு முயற்சித்து வந்துள்ளார். இதையறிந்த அவருடன் பணியாற்றிய சிவசங்கர், தனக்கு தெரிந்த நபர் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8.86 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். ஆனால் அவர் ஏமாற்றிய நிலையில், சிவசங்கர் மீது ஆறுமுகம் போலீசில் புகாரளித்தார். அதனடிப்படையில், சிவசங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!