News March 26, 2025

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை 1/2

image

தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடன் படிக்கும் சக மாணவியுடன் ஆண் நண்பரைச் சந்திப்பதற்காக சென்றார். நீண்ட நேரத்துக்கு பிறகு ஒரு மாணவி மட்டும் கல்லூரி விடுதிக்கு திரும்பி உள்ளார். மற்றொரு மாணவி, ரத்த காயங்களுடன் மறுநாள் கல்லூரி விடுதிக்கு வந்துள்ளார். அப்போது, அந்த நண்பர் தனக்கு போதைபொருளை கொடுத்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார்.

Similar News

News March 29, 2025

நந்தனம் கல்லுரியில் வேலைவாய்ப்பு முகாம்

image

சென்னை நந்தனம் அரசு கலை அறிவியல் கல்லூரியில், இன்று (மார்.29) வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. காலை 8 மணியளவில் தொடங்கி பிற்பகல் 3 மணிவரை நடைபெறும். இந்த முகாமில் சுமார் 20,000 இளைஞர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த <>லிங்கில் <<>>பதிவு செய்து பங்கேற்கலாம். ஷேர் பண்ணுங்க

News March 29, 2025

காற்று மாசுபாடு: ரூ.5 லட்சம் வரை அபராதம்

image

சென்னை மாநகரில் கட்டுமான பணிகளால் ஏற்படும் காற்று மாசுவை தணிக்க தவறினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் வரைவு வழிகாட்டுதலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. காற்று மாசுபாட்டை தணிக்கும் நடவடிக்கைகளை பணியாளர்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய சிசிடிவி கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது அதை சமர்ப்பிக்க வேண்டும் என மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.

News March 29, 2025

நீட் தேர்வு அச்சம்: மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த தர்ஷினி என்ற மாணவி, அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் நீட் தேர்வுக்கு பயின்று வந்துள்ளார். வரும் மே மாதம் நடைபெற உள்ள தேர்வுக்கு தயாராகி வந்த இவர், ஏற்கெனவே 2021ஆம் ஆண்டு முதல் 2 முறை நீட் தேர்வு எழுதி கட் ஆப் வரவில்லை. இந்நிலையில், தேர்வுக்கு பயந்து நேற்று (மார்.28) தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!