News August 3, 2024

கல்லூரி மாணவர் வழக்கில் சிக்கிய 4 பேர்

image

ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த விராலிமலையே சேர்ந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த வழக்கில், ஸ்ரீரங்கம் போலீசார் இன்று 4 பேரை கைது செய்தனர். ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நவீன், விஜய், 17 வயதான 2 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளி சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர். விசாரணையில், 5 பேரும் சேர்ந்து தான் மதுபோதையில் ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கினோம் என்பதை ஒப்புக்கொண்டனர்.

Similar News

News August 21, 2025

முதன்மை கல்வி அலுவலகத்தில் உயர்வுக்கு படி முகாம்

image

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நாளை (ஆக.22) உயர்வுக்கு படி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகமானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது. மேலும் இம்முகாமில் கல்விக் கடன் கல்லூரி சேர்க்கைக்கு தேவையான சான்றிதழ்கள், உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் போன்ற பயன்களை பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 21, 2025

புதுகை அருங்காட்சியகத்தில் புதிர்ப்போட்டி

image

புதுகை அருங்காட்சியகம் சார்பில் ‘அறிவோம் அருங்காட்சியகம்’ என்ற தலைப்பில் வரும் ஆக.21, 22ம் தேதிகளில் அருங்காட்சியகம் வரும் ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அருங்காட்சியகம் பற்றிய கேள்விகள் கேட்கப்படும். வரும் ஆக.23 அன்று சரியான விடை எழுதியோரில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

புதுகை: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்ற ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!