News August 18, 2024

கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

image

டெல்லியைச் சேர்ந்த அக்சத், ஹரியானைவைச் சேர்ந்த சுமித்குமார். இவர்கள் 2 பேர் கோவையில் தனியார் பல்கலை.,யில் படித்து வருகின்றனர். நேற்று 2 பேர் நண்பர்களிடம் பைக் வாங்கி கொண்டு, வால்பாறைக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது, சாலையோரம் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியில் பைக் உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்தில் சிக்கியது. இதில் சுமித், அக்சத் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டத்தில் உயிரிழந்தனர்.

Similar News

News August 5, 2025

கோவை: ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு தொடக்கநிலை மற்றும் புத்தாக்கத் திட்டம் (TANSIM) மூலம், StartupTN திட்டத்தில் காலியாக உள்ள Project Associate பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12ம் தேதிக்குள், <>https://startuptn.in/ <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 5, 2025

கோவையில் தேனீ வளர்ப்பு பயிற்சி

image

கோவை, வேளாண் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்ப்பில், தேனி வளர்க்க நாளை ஒருநாள் (ஆக.6) பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தேனி இனங்களை கண்டறிந்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 4, 2025

ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம்!

image

கோவையில் நேற்று ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக, கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் இன்று தெரிவித்துள்ளார். மாநகர் பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக, மதன் கண்ணன், அறிவழகன், கோபிநாத், அருண் குமார், சுஜி மோகன் ஆகிய 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!