News August 11, 2024

கல்லூரி மாணவர்கள் பலி: விரைந்தார் கலெக்டர்

image

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் எஸ்ஆர்எம் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு, இன்று மாலை காரில் 7 பேர் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ராமஞ்சேரி அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனிடையே, மாவட்ட எஸ்.பி. மற்றும் கலெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Similar News

News September 8, 2025

திருவள்ளூர்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

திருவள்ளூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்து SMS வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க)

News September 8, 2025

நந்தியம்பாக்கம்: மின் கம்பியை மிதித்து 4 எருமை மாடுகள் பலி

image

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நளினி மற்றும் பலராமன் தம்பதியரின் நான்கு எருமை மாடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தன. இன்று காலை, நந்தியம்பாக்கம் பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்றபோது, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் இந்தச் சோகம் நேர்ந்துள்ளது. பால் வியாபாரத்தை நம்பி இருந்த இந்தத் தம்பதியருக்கு, மாடுகளின் இழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 7, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் செப்டம்பர் 7, 2025 அன்று இரவு ரோந்துப் பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பட்டியல் காவல் நிலையம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் இந்த அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம். அத்துடன், அவசர உதவி எண் 100-ஐயும் பயன்படுத்தலாம். பொதுமக்கள் எளிதாகத் தொடர்புகொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!