News April 25, 2025

கல்லூரி மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் நாவுபாடா(19) என்பவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாணவரின் உடல் விருதுநகர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 3, 2025

விருதுநகர் : நாளை மின்தடை பகுதிகள்

image

சேத்தூர் பகுதியில் நாளை (நவ. 4) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதே போல சிவகாசி பகுதியிலும் நாளை (நவ. 4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

News November 3, 2025

விருதுநகர்: டிகிரி தகுதி.. 5,810 ரயில்வே காலியிடங்கள்

image

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் <>www.rrbchennai.gov.in<<>> என்ற தளத்தில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் : ரூ.25,500 – ரூ.35400 வழங்கப்படும். கடைசி தேதி : 20.11.2025 ஆகும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News November 3, 2025

சாத்தூர்: கண்மாயில் மூழ்கி ஒருவர் பலி

image

வெம்பக்கோட்டை அருகே மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (63). கூலி தொழிலாளியான இவர் அருகில் உள்ள கோட்டை கண்மாயில் குளித்துவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவருடைய உறவினர்கள் தேடி வந்தனர். இதற்கிடையில் அவர் கண்மாயில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!