News February 13, 2025

கல்லூரிகள் மாணவர்களை அணுகினால்.. ஆட்சியர் எச்சரிக்கை

image

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களை அரசு அங்கீகாரம் பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள் அனுகி அவர்களை சேர்ப்பதாகவும், ஒரு சில ஆசிரியர்களே மாணவர்களின் விவரங்களை கல்லூரிகளுக்கு தருவதாகவும் புகார் எழுந்துள்ளது. மாணவர்களின் விவரங்களை அளிப்பதோ, சேர்ப்பதோ, கல்லூரி மாணவர்களை நேரடியாக அணுகினாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.

Similar News

News October 29, 2025

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 31.10.2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 8ம் வகுப்பு முதல் பொறியியல் வரை தகுதியுள்ளோர் தளத்தில் பதிவு செய்ய <>CLICK <<>> செய்யவும். சான்றுகள் மற்றும் ரெஸ்யூம் உடன் கலந்து கொள்ளலாம். இது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். SHARE

News October 29, 2025

சிவகாசி: பட்டாசு வெடித்த பெண் பலி

image

ஏழாயிரம்பண்ணை அருகே இ.ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால்சாமி மனைவி சோலையம்மாள்(34). இவர் தீபாவளி அன்று குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து கொண்டாடிக் கொண்டிருந்த போது அவர் மீது பட்டாசு விழுந்து சேலையில் தீ பிடித்ததில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சோலையம்மாள் உயிரிழந்த நிலையில் ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 29, 2025

ஸ்ரீவி: மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள்

image

கூமாப்பட்டி கிழவன்கோவிலை சேர்ந்தவர் செல்வகணேஷ். இவரது மனைவி சுமதிக்கும், பேருந்து ஓட்டுனர் ராமச்சந்திரனுக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டது. இதனை செல்வகணேஷ் கண்டித்துள்ளார். சுமதி, ராமச்சந்திரன், நண்பர் வேல்முருகன் ஆகியோர் சேர்ந்து செல்வகணேசை கொலை செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுமதி, ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.வேல்முருகன் விடுதலையானார்.

error: Content is protected !!