News March 29, 2024

கல்குவாரியில் சூறையாடிய இரண்டு வாலிபர்கள் கைது

image

செய்யார் வெம்பாக்கம் அருகே உள்ள கரந்தை கிராமத்தில் இயங்கும் கல்குவாரியில் கடந்த 26 ஆம் தேதி கரந்தை கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன், வல்லரசு, யுவராஜ் ஆகியோர் கல்குவாரியில் புகுந்து லாரியின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை சூறையாடினர்.
நேற்று(மார்ச்.28) அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த தூசி போலீசார் வல்லரசு, யுவராஜ் ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து தலைமறைவான ஜெகதீசனை தேடி வருகின்றனர்.

Similar News

News February 16, 2026

தி.மலை: ஹோட்டல், டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்

image

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு தி.மலை மாவட்ட சமூக நல அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News February 16, 2026

தி.மலை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

தி,மலை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 16, 2026

தி.மலையில் அதிரடி கைது!

image

வந்தவாசி வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா் சளுக்கை கிராமம் வழியாக ரோந்து சென்றனா். அப்போது இங்கு நின்று கொண்டிருந்த சளுக்கை கிராமத்தைச் சோ்ந்த வசந்தகுமாா் (19) போலீஸை கண்டதும் ஒட்டம் பிடித்தார். அவரை பிடித்து விசாரித்தில் 25 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. வசந்தகுமாா் கைது செய்த போலீஸ் அவரின் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

error: Content is protected !!