News March 25, 2024
கலெக்டர் அலுவலகம் முன் போலீஸ் குவிப்பு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக, பாஜக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிக அளவிலான கட்சி தொண்டர்கள் வருவார்கள் என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வேட்பாளருடன் 5பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 2, 2026
மதுரை: டூவீலர்கள் மோதியதில் இளைஞர் பலி

உசிலம்பட்டி அருகே கல்லூத்தை சேர்ந்தவர் சிவபாண்டி(24). இவர் கரடிகல்லில் இருந்து கூத்தியார்குண்டு சாலையில் நேற்று டூவீலரில் சென்ற போது, எதிரே மற்றொரு டூவீலரில் வந்த சேடப்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம்(40) மோதினார். இதில் தலையில் அடிபட்டு சிவப்பாண்டி பலியானார். படுகாயத்துடன் பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 2, 2026
சார்பதிவாளருக்கு எதிராக பாமகவினர் ஆர்ப்பாட்டம்

திருமங்கலம் செக்காரனூரணி சார்பதிவாளராக உமாதேவி உள்ளார். இவர் அங்கீகாரம் இல்லாத பத்திரப்பதிவுகளுக்கு சென்ட்க்கு ரூ.10,000 வீதம் பட்டா மாறுதல் இல்லாத பதிவுகளுக்கு சொத்து மதிப்புக்கு ஏற்ப ரூ.20000 முதல் ரூ.50000 லஞ்சம் பெறுவதாக கூறி அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாவட்ட பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாமகவினர் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
News February 2, 2026
மதுரை: ரூ.12 லட்சம் அபராதம் விதித்த அதிகாரிகள்

மதுரை தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானம் கழக மதுரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், கோட்ட பொறியாளர் மனோகரன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஏழுமலை, உத்தபுரம், உசிலம்பட்டி, மேலூர், கருங்காலக்குடி, சோழவந்தான், விக்ரமங்கலம், செக்கானூரணி, கள்ளிக்குடி, வாடிப்பட்டி, பாலமேடு பகுதியில் பலர் மின் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு ரூ.12.25 லட்சம் அபராதம் விதித்தனர்.


