News March 10, 2025

கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மனுக்கள் 

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனைபட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 741 மனுக்களை அளித்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 10, 2025

திருப்பூரில் 14 மருந்தகங்களுக்கு உரிமம் ரத்து

image

திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது என மருந்து கட்டுப்பட்ட ஆய்வாளர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் 2024 ஜனவரி மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரை திருப்பூர் மாவட்டத்தில் பரிந்துரை கடிதம் இல்லாமல் மருந்து விற்பனை செய்த 11 மருந்தகங்களுக்கு தற்காலிகமாகவும் மூன்று மருந்துகளுக்கு நிரந்தரமாகவும் உரிமம் ரத்து.

News March 10, 2025

பின்னலாடைக்கு வந்த சோதனை

image

“டாலர் சிட்டி” எனப்படும் திருப்பூரில் ஏற்றுமதி (ம) உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியில் அபார வளர்ச்சி பெற்றது. கோவிட் காலத்தில் கேரளாவில் சிறிய யூனிட் துவங்கி ஆடையாக வடிவமைத்து உள்ளுர் சந்தையில், பின்னலாடைகளை காட்டிலும் தரம் குறைவாக இருந்தாலும், ஒரு ஆடை விலை ரூ.25-க்கு விலை குறைவாக கிடைக்கிறது. இதனால், அங்கு விற்பனை சூடுபிடித்து கேரள மார்க்கெட் தொடர்பு திருப்பூருக்கு படிப்படியாக குறைந்து வருகிறது.

News March 10, 2025

ரூ.99 லட்சம் பரிசு! போஸ்டர் வைரல்

image

மும்மொழி கல்விக் கொள்கையில் இந்தித் திணிப்பை கண்டுபிடித்தால், ரூ. 99 லட்சம் பரிசாக வழங்கப்படும் என பாஜக சார்பில் திருப்பூரில் ஒட்டப்பட்ட போஸ்டர் வைரல் ஆகி வருகிறது. அப்போஸ்டரில் முதல் மொழி தமிழ், இரண்டாம்மொழி ஆங்கிலம், 3ஆவதுமொழி மாணவரகளின் விருப்பத் தேர்வு. இந்த மும்மொழிக் கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பை கண்டுபிடித்தால் ரூ.99 லட்சம் பரிசு வழங்கப்படும் என வாசகம் இடம் பிடித்திருந்தது.

error: Content is protected !!