News October 8, 2024

கலெக்டரிடம் குவிந்த புகார் மனுக்கள்

image

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். இதற்காக துறைவாரியாக அமைக்கப்பட்ட கவுண்டர்களில் பொதுமக்கள் மனுக்கள் பதிவு செய்யப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

Similar News

News August 27, 2025

எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் – மாவட்ட வருவாய் அலுவலர்

image

நெல்லை மாவட்ட அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவில் ஏற்படும் குறைபாடுகள்/தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் குறைதீர்வு கூட்டம் நாளை பிற்பகல் 4 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது என ஆர்டிஓ சுகன்யா தெரிவித்துள்ளார்.

News August 27, 2025

நெல்லையப்பர் கோவில் வளாக கடைகள் அகற்ற காலக்கெடு

image

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் மர மண்டபத்தில் உள்ள கடைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால், சென்னை உயர்நீதிமன்றம் 12 வாரங்களுக்குள் அவற்றை அகற்ற உத்தரவிட்டது. இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி நேரில் விளக்கமளித்தார். கோயிலை புராதன நினைவுச்சின்னமாக அறிவிக்கக் கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள், பழைமையான மரச்சிற்பங்களை பாதுகாக்க வலியுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.

News August 27, 2025

தூய்மை பணியாளர்கள் மனு மீது விரைந்து நடவடிக்கை – ஆட்சியர்

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய குறைதீர் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் இரா.சுகுமார், பணியிட பாதுகாப்பு, சீருடை, ஊதியம் உறுதி செய்ய உத்தரவிட்டார். நான்கு பணியாளர்களுக்கு ரூ.59,000 மதிப்பில் இறப்பு, கல்வி, மகப்பேறு உதவித்தொகை வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!