News April 25, 2024

கலவை அருகே ஃபிரிட்ஜ் எரிந்து விபத்து!

image

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா, மேல்நெல்லி கிராமம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ரோஸ்(45). இவரது வீட்டில் இன்று(ஏப்.24) அதிகாலை 3 மணிக்கு மின் கசிவு காரணமாக ஃப்ரிட்ஜ் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில், அருகில் இருந்த 3 மூட்டை வேர்க்கடலை மற்றும் ரூ.3,000 ரொக்கம் எரிந்து சேதமானது. கலவை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Similar News

News August 21, 2025

ராணிப்பேட்டை: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

image

ராணிப்பேட்டை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)

News August 21, 2025

ராணிப்பேட்டை: விஏஓ, தாசில்தார் லஞ்சம் கேட்டால்? CALL பண்ணுங்க

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள VAO, தாசில்தார் மற்றும் அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். புகார்களை dsprptdvac.tnpol@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04172-299200 எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க.

News August 20, 2025

FLASH: ராணிப்பேட்டையில் இபிஎஸ் சொன்ன குட் நியூஸ்!

image

ராணிப்பேட்டை, சோளிங்கர் பகுதியில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையை இன்று (ஆக.20) EPS மேற்கொண்டுள்ளார். இதில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் 6 லட்சம் பேர் பயன் பெற்றனர் எனவும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் இந்த திட்டத்தில் மணப்பெண்ணுக்கு பட்டு சேலையும், மணமகனுக்கு பட்டு வேட்டியும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

error: Content is protected !!